மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தும் ஃபேக்டர்: இவ்வளவு உயர்வு இருக்கும்!

Published On:

| By Santhosh Raj Saravanan

pay hike expected for central govt employees under 8th pay

புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், 2026 ஜனவரி 1 முதல் 8வது சம்பளக் கமிஷன் அமலுக்கு வரவுள்ளதால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக காத்திருக்கின்றனர். தற்போதுள்ள 7வது சம்பளக் கமிஷனின் காலக்கெடு டிசம்பர் 31, 2025 அன்றுடன் முடிவடைகிறது. எனவே, ஜனவரி 1, 2026 முதல் இன்னும் அறிவிக்கப்படாத 8வது சம்பளக் கமிஷன் விதிகள் நடைமுறைக்கு வரும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படும் அடிப்படை காரணியான ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ மற்றும் சம்பள உயர்வு பற்றியே தற்போது முக்கிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 7வது சம்பளக் கமிஷனின் கீழ் ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 ஆக உள்ளது.

ADVERTISEMENT

8வது சம்பளக் கமிஷனின் கீழ் சம்பள உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து தற்போது எந்தத் தெளிவும் இல்லை. இருப்பினும், “சிக்கலான நிலுவைத் தொகை கணக்கீட்டு செயல்முறை குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அரசு இந்த திருத்தத்தை வழக்கத்தை விட முன்னதாகவே அறிவிக்கக்கூடும்” என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் மோதிலால் நேரு கல்லூரியின் பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான பேராசிரியர் ரஜ்னிஷ் க்ளேர் தெரிவித்துள்ளார்.

8வது சம்பளக் கமிஷனின் கீழ் சம்பள உயர்வு ஃபிட்மென்ட் ஃபேக்டர் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். சம்பளக் கமிஷன் உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்பது புதிய சம்பளக் குழு புதிய அடிப்படை சம்பளத்தைக் கணக்கிடப் பயன்படுத்தும் பெருக்கி ஆகும். பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை 8வது சம்பளக் கமிஷன் கருத்தில் கொண்டு ஃபிட்மென்ட் ஃபேக்டரை நிர்ணயிக்கும்.

ADVERTISEMENT

8வது சம்பளக் கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு ஒவ்வொரு ஊழியரின் சம்பள அளவைப் பொறுத்து மாறுபடும். குறிப்பாக, கேபினட் செயலாளர் போன்ற உயர் அதிகாரிகளைக் கொண்ட லெவல் 18 அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பளக் குழுவின் கீழ் அதிகபட்ச சம்பள உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.15 ஆக நிர்ணயிக்கப்பட்டால், சம்பள உயர்வு பின்வருமாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

லெவல் 1: தற்போதைய சம்பளம் ரூ. 18,000 ஆக இருக்கும்போது, உயர்த்தப்பட்ட சம்பளம் ரூ. 38,700 ஆக இருக்கும்.
லெவல் 5: தற்போதைய சம்பளம் ரூ. 29,200 ஆக இருக்கும்போது, உயர்த்தப்பட்ட சம்பளம் ரூ. 62,780 ஆக இருக்கும்.
லெவல் 10: தற்போதைய சம்பளம் ரூ. 56,100 ஆக இருக்கும்போது, உயர்த்தப்பட்ட சம்பளம் ரூ. 1,20,615 ஆக இருக்கும்.
லெவல் 15: தற்போதைய சம்பளம் ரூ. 1,82,200 ஆக இருக்கும்போது, உயர்த்தப்பட்ட சம்பளம் ரூ. 3,91,730 ஆக இருக்கும்.
லெவல் 18: தற்போதைய சம்பளம் ரூ. 2,50,000 ஆக இருக்கும்போது, உயர்த்தப்பட்ட சம்பளம் ரூ. 5,37,500 ஆக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share