6 அம்ச பிரார்த்தனைகளுக்காக ஒரு வாரம் ‘விரதம்’ அறிவித்த நயினார் நாகேந்திரன்!

Published On:

| By Minnambalam Desk

Nainar Nagendran

தமிழக நலன் சார்ந்த 6-அம்ச பிரார்த்தனைகளை முன்னிறுத்தியும் மதுரை முருகன் மாநாடு சிறப்பாக நடைபெறவும் ஒரு வாரம் ‘விரதம்’ இருப்பதாக அறிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். Nainar Nagendran Announces One-Week Fasting

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணியமாட்டேன் என விரதம் இருப்பதாக அறிவித்தார். தமிழக பாஜகவின் புதிய தலைவரான பின்னர் அண்ணாமலையின் இந்த விரதத்தை முடித்து வைத்தார் நயினார் நாகேந்திரன்.

தற்போது நயினார் நாகேந்திரன், ஒரு வாரம் விரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் இன்று ஜூன் 16-ந் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முருக பக்தர்கள் மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்று மாபெரும் வெற்றியடையவும், தமிழக நலன் சார்ந்த 6-அம்ச பிரார்த்தனைகளை முன்னிறுத்தியும், இன்று முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்ள உள்ளேன். ஆறுமுகனின் அருளாசியுடன் அனைத்தும் நன்றாக நிகழ பக்தர்கள் அனைவரும் பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share