மோடி 3.0: எங்கே அந்த இரும்பு மனிதர்?

Published On:

| By Minnambalam Desk

Modi 3.0

அஜோய் ஆசீர்வாத் மகாப்ரஷஸ்தா Modi 3.0

நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் அவரிடம் பெரிய கருத்தியல் மாற்றத்தைக் கண்டோம்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட உளவுத்துறை தோல்வி குறித்த சிக்கலான கேள்விகளை அவர் எதிர்கொண்டாலும், அவரது அரசு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முடிவுசெய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. Modi 3.0

சாதிவாரிக் கணக்கெடுப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சிகளின் முதன்மையான நிகழ்ச்சி நிரலாக இருந்தது. அகிலேஷ் யாதவ் அல்லது தேஜஸ்வி யாதவ் போன்ற சோஷலிசத் தலைவர்கள் மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒவ்வொரு தளத்திலும் தொடர்ந்து இந்த கோரிக்கையை முன்வைத்துவந்தார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு, விளிம்புநிலைக் குழுக்கள் சமூக ரீதியாகவும் நிதி அளவிலும் எதிர்கொள்ளும் பாதிப்புகளைச் சிறப்பாக அடையாளம் காண உதவும் என்றும், இது நலத்திட்ட நடவடிக்கைகளை மிகவும் திறம்படச் செயல்படுத்த உதவும் என்றும் அவர்கள் வாதிட்டனர். Modi 3.0

இத்தகைய கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சி இகழ்ச்சியுடனும் கேலியுடனும் எதிர்கொண்டது. சாதி அரசியலைத் தூண்டி, பாரதத்தைப் பழங்காலத்திற்கு இழுத்துச் செல்வதாகப் பிரதமர் எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசினார். நாட்டில் நான்கு சாதிக் குழுக்களை மட்டுமே தன்னால் பார்க்க முடிகிறது என்றும், அவை “ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள்” என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

ஒரு சமயத்தில், சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான கோரிக்கையை “நகர்ப்புற நக்சல்” சிந்தனை என்று அவர் வர்ணித்தார். வேறு பல பாஜக மூத்த தலைவர்களும் சாதிவாரிக் கணக்கெடுப்பை பிளவுபடுத்தும் கோரிக்கை என்று கூறினார்கள். Modi 3.0

2024 மக்களவைத் தேர்தல் சாதிவாரிக் கணக்கெடுப்பைப் பற்றிய பார்வைகளை மாற்றியது. பாஜக தனது கூட்டணிக் கட்சிகளான நிதீஷ் குமார், சிராக் பாஸ்வான், என். சந்திரபாபு நாயுடு ஆகியோரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. பாஜகவுக்கு இந்துத்துவம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களுக்குச் சாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கியம். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய அரசியலின் போக்கைத் தீர்மானிக்கக்கூடிய தலைவராக இனி இருக்க முடியாது. Modi 3.0

மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரது கருத்தியல் மாற்றம் தொடங்கியது. அவரது அரசு தனது கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்குப் பணிந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (UPSC) 45 லேட்டரல் என்ட்ரி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு விளம்பரத்தைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டது.

லேட்டரல் என்ட்ரி நியமனங்கள், ஜனநாயக விரோத முடிவுகள் என்று கூறப்படுவதற்காக மட்டுமல்லாமல், இடஒதுக்கீட்டைத் தவிர்ப்பதற்காகவும் சர்ச்சைக்குள்ளானது. தனது விளம்பரத்தைத் திரும்பப் பெறும்போது, மூத்த அமைச்சர் ஜிதேந்திர சிங், “சமூக நீதி, ஒடுக்க்ப்பட்டோருக்கு அதிகாரமளித்தல்” மீதான மோடி அரசின் உறுதிப்பாட்டை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். 

இது மோடி 3.0இன் முதல் நடவடிக்கை. இது ஒரு முக்கிய உண்மையைக் குறிப்பதாகக் கருதலாம். பாஜகவின் தீவிர இந்துத்துவ அரசியல் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஓபிசிகள், தலித்துகளில் ஒரு பெரிய பிரிவினரை அந்நியப்படுத்தியிருக்கலாம். இதை மனதில் கொண்டு எடுத்த நடவடிக்கையாக இதைக் கருதலாம். Modi 3.0

சாதி குறித்த பேச்சு Modi 3.0

2014ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஆதிக்கம் செலுத்தாத சாதிக் குழுக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் மோடி ஆட்சி பெரிய அளவில் முயற்சி எடுத்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக, சாதி அடிப்படையிலான சமூக நீதிப் பேச்சை எதிர்க்கட்சிகளின் “சந்தர்ப்பவாத ஓட்டு வங்கி அரசியல்” என்று புறக்கணித்து வந்தாலும், தேர்தல் வெற்றிகளுக்குப் பெரும்பாலும் அதையே நம்பியிருந்தது. முற்றிலும் வேறுபட்ட முறையில் சாதி அரசியலை முன்னெடுத்தது. Modi 3.0

சமாஜ்வாதி கட்சி அல்லது ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற சோஷலிசக் கட்சிகள், சமீபத்தில் காங்கிரஸ் ஆகியவை ஜனநாயகமயமாக்கல், பொது வளங்களைச் சமமாக விநியோகித்தல் ஆகியவற்றுக்கான அவசியமான நீண்ட பாதையாக சாதி அடிப்படையிலான நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுகின்றன. பாஜகவோ அரசியலிலும் அரசியலமைப்பு சார்ந்த பதவிகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதன் மூலம் ஓபிசிகள், தலித்துகளில் விளிம்புநிலைக் குழுக்களை அணிதிரட்டியது. அதே நேரத்தில், சந்தை சார்ந்த வளர்ச்சியையும் வெளிப்படையாகத் தொடர்ந்து, விளிம்புநிலைக் குழுக்களுக்குக் கடந்த காலத்தில் நேரடியாகப் பயனளித்த அரசு நிறுவனங்களைப் பலவீனப்படுத்தியது.

காவிக் கட்சி இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் ஏதேனும் ஒரு ஓபிசி அல்லது தலித் குழுவை மற்றவர்களுக்கு எதிராக நிறுத்தும் தந்திரத்தைக் கடைப்பிடித்துத் தேர்தல்களில் வெற்றிபெற முயற்சித்துள்ளது. இதன் விளைவாக, ஓபிசிகள், தலித்துகளிடையே ஒற்றுமையின்மையை அது உருவாக்கியுள்ளது.

இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அயோத்தி கோவிலைச் சுற்றி பாஜக உருவாக்கிய ஆரவாரமும், ஓபிசிகள், தலித்துகளுக்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களை அச்சுறுத்திய சில “உயர் சாதி” காவித் தலைவர்களின் பேச்சுக்களும் காவிக் கட்சியின் பல அரசியல் ஆதாயங்களை நீர்த்துப்போகச்செய்தன. இது மோடி மக்களவையில் தனது பெரும்பான்மையை இழந்ததில் பிரதிபலித்தது. மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைக் கடப்போம் என்று மீண்டும் மீண்டும் கூறி வந்த பாஜகவுக்கு இந்த முடிவு பெரும் வீழ்ச்சி. இந்துத்துவம், அதிரடி தேசியவாதம் ஆகியவற்றுக்கான ஆதரவு குறைந்துவருவதற்கான வலுவான அறிகுறியும்கூட. 

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியலமைப்பின் மீதான உறுதிப்பாட்டைத் தொடர்ந்து காட்டுவதும், “தவறான கதை”யைப் பரப்பியதற்காக எதிர்க்கட்சிகளைத் தாக்குவதும் பாஜகவின் குழப்பத்தை மட்டுமல்லாமல், சமூக நீதி அரசியலைத் தவிர்க்கத் தவறியதால் அது எதிர்கொண்ட சிக்கலையும் உணர்த்தியது. Modi 3.0

இடஒதுக்கீடு Modi 3.0

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்ததன் மூலம், மோடி ஒருவழியாக சாதியின் அரசியல் முக்கியத்துவத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார். அவர் முன்பு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான கோரிக்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் அதை இழிவுபடுத்துவதன் மூலம் பன்முகத்தன்மை கொண்ட பாரதத்தின் தலைவராக இருக்க முடியாது என்பதை இப்போது உணர்ந்துள்ளார்.

இந்த விஷயத்தில் அவரது சரணாகதி, மோடி தனது முடிவை திரும்பப் பெற நிர்பந்திக்கப்பட்ட இரண்டாவது பெரிய சந்தர்ப்பமாக இருக்கலாம். முதல் சந்தர்ப்பம், 2020-2021இல் ஒரு வருட கால விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை ரத்து செய்த அவரது முடிவு.

விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற்றதைப் போலன்றி, இந்த விஷயத்தில் மோடி கடினமானதொரு போர்முனையில் நிற்கிறார். சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொள்வதன் மூலம், எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள ஒரு மிகவும் உறுதியான கோரிக்கைக்கு – இடஒதுக்கீடு மீதான 50% உச்சவரம்பை நீக்குவதற்கு – அவர் சம்மதம் தெரிவிக்க வேண்டிய அழுத்தத்திற்குத் தன்னை ஆளாக்கிக்கொண்டுள்ளார். ராகுல் காந்தியும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் 50% உச்சவரம்பு செயற்கையானது என்றும் மக்களை அது உரிய அளவில் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ராஜதந்திர ரீதியான தனிமையையும், சர்ச்சைக்குரிய வக்ப் (திருத்த) சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் குழுக்களின் ஒன்றுபட்ட உறுதியையும் எதிர்கொள்ளும் நேரத்தில், இடஒதுக்கீடு மீதான 50% உச்சவரம்பை நீக்குவதற்கான கோரிக்கையை மோடியால் கையாள முடியுமா? இந்த விஷயத்தில் “ஆம்” அல்லது “இல்லை” என்ற இரண்டுமே அவரது அரசியல் வாழ்க்கையில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இது இந்திய அரசியலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உலகெங்கிலும் உள்ள வெகுமக்கள் தலைவர்கள், தங்கள் வியூகத் திறன்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தி, கையாள முடியாத அளவுக்குப் பல போர்முனைகளில் களமிறங்கும்போது வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறார்கள். அத்தகைய இக்கட்டான நிலையில் மோடி தற்போது இருக்கிறார். மூன்றாவது பதவிக்காலத்தில் மீதமுள்ள நான்கு ஆண்டுகள் ஒரு தலைவராக அவருக்கு மிகப்பெரிய சோதனையாக இருக்கும். 

நன்றி: தி வயர் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share