பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான மாளவிகா மோகனன். விஜய்யுடன் நடித்த மாஸ்டர் படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவின் பிசியான நடிகையாக வலம் வருகிறார். malavika mohanan gave sharp reply to his fan
அவர் கைவசம் தற்போது தமிழில் கார்த்தியுடன் ’சர்தார் 2’, தெலுங்கில் பிரபாஸுடன் ’தி ராஜாசாப்’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ’ஹிருதயபூர்வம்’ ஆகிய படங்கள் உள்ளன.
இதற்கிடையே தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று #AskMalavika என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தன்னிடம் ரசிகர்கள் எழுப்பிய சுவாரசியமான மற்றும் சூடான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஒப்பனை இல்லாத கலைப் படம் பிடிக்குமா?
அப்போது ஒரு ரசிகர், ’TheRajaSaab படப்பிடிப்பு தளத்தில் உங்களுக்குப் பிடித்த தருணம் என்ன?’ என்று கேட்டார்.
அதற்கு அவர், “தி ராஜாசாப் டீசர் வெளிவந்த உற்சாகத்தில் இருக்கிறேன். எனக்கு அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரபாஸை முதன்முதலில் சந்தித்தது தான் எனக்கு மிகவும் பிடித்த தருணங்களில் ஒன்று.
நான் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்து, தூங்காமல் ஹைதராபாத் சென்றிருந்தேன். மிக சோர்வாக இருந்தேன், ஆனால் பிரபாஸ் சாரை பார்த்தவுடன் சோர்வு போய்விட்டது.
அவர் கவர்ச்சிகரமானவர், அன்பானவர், ஒரு அற்புதமாக பேசுபவர் என்றும் சேர்த்துக்கொள்ளலாம்.
இன்னொருவர், ’உங்களுக்கு நிறைய கவர்ச்சியுடன் கூடிய முழு மசாலா படமா அல்லது ஒப்பனை இல்லாத கலைப் படமா.. எது உங்கள் பிடிக்கும்?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மாளவிகா, “எனக்கு இரண்டையும் பேலன்ஸ் செய்து நடிப்பது தான் எப்போதும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒரு கலைஞனாக எனக்கு மிகவும் சவாலாக இருந்த ’தங்கலான்’ படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் முற்றிலும் மாறுபட்ட ஒரு இடத்தில் மூழ்கி அழகாக உடை அணிந்து, கவர்ச்சியாகத் தோன்றி, வேடிக்கையான பாடல்களுக்கு ஆட வேண்டும் என விரும்புகிறேன். இவை அனைத்தையும் நான் ராஜாசாப் படத்தில் செய்கிறேன். அதே நேரத்தில் நிறைய அதிரடி மற்றும் மிகவும் சீரியஸான கதாப்பாத்திரம் கொண்ட சர்தார் 2-படத்திலும் பணிபுரிகிறேன். இப்படி இரண்டையும் பேலன்ஸ் செய்வது என்பது என்னை மிகவும் உற்சாகப்படுத்தும். சலிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கும்” என்றார்.

நான் எதுவும் சொல்வதற்கு இல்லை!
’சினிமாவில் தளபதி விஜய்யை நீங்கள் மிஸ் செய்கிறீர்களா? என்ற கேள்விக்கு,
நான் ஜனநாயகன் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். நிஜ வாழ்க்கையில் தான் நான் அவரை மிஸ் அதிகம் மிஸ் செய்கிறேன். நான் நீண்ட காலமாக சென்னையில் இல்லாததால் இவ்வளவு காலமாக அவரைப் பார்க்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இன்னொரு ரசிகர், ‘ஒரு திரைப்பட ரசிகராக, போட்டோஷூட், மாடலிங் செய்ய போடும் உழைப்பை நீங்கள் படங்களில் காட்டுவதில்ல என நான் நினைக்கிறேன். நான் சொல்வது சரியா தவறா?’ எனக் கேட்டிருந்தார்.
அதற்கு மாளவிகா, “தங்கலானில் எனது கதாப்பாத்திரத்திற்கு உடல் வருத்தி நான் போட்ட உழைப்பை நீங்கள் பார்க்கவில்லை என்றால், நான் எதுவும் சொல்வதற்கு இல்லை” எனக் காட்டமாக பதிலளித்தார்.