உங்களுக்கு மாதம் ரூ.1000 வரலையா?: மகளிருக்கு முதல்வரின் புது அறிவிப்பு!

Published On:

| By Kavi

magalir urimai thogai scheme new applications

ஜூலை 15 முதல் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். magalir urimai thogai scheme new applications

தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 25 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர். 

விடுபட்ட பெண்களையும் இந்த திட்டத்தில் சேர்க்கதமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான அடுத்த கட்ட பயனாளிகள் சேர்ப்பு பணிகள் ஜூன் 4ம் தேதி நடக்க இருந்தது. இதற்காக  மாநிலம் முழுவதும் 9000 கேம்புகள் நடத்தப்படும்  என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார். 

ஆனால்  முழுமையாக விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. 

இந்தநிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

 தஞ்சையில் அரசு சரபோஜி கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இன்று (ஜூன் 16) கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்,  ஜூலை 15ஆம் தேதி முதல் மக்களின் குறைகளை போக்க உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். அப்போது மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விடுபட்டவர்களும் புதிதாக விண்ணப்பிப்பவர்களும் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம் என கூறியுள்ளார். magalir urimai thogai scheme new applications

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share