வங்கக் கடலில் வரும் 24-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று அக்டோபர் 16-ந் தேதி தொடங்கியது. தமிழகம், புதுவை, கேரளா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
குமரிக் கடல், அதனை ஒட்டிய வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்
கன்னியாகுமரி
தூத்துக்குடி
திருநெல்வேலி
தென்காசி
விருதுநகர்
ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என்பதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 18-ந் தேதியன்று
நீலகிரி
கோவை
திண்டுக்கல்
தென்காசி
திருப்பூர்
ஈரோடு
கிருஷ்ணகிரி
தருமபுரி
சேலம்
ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை அறிவிப்புகளில், 11 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மிக கனமழை பெய்யக் கூடும் என்ற நிலையில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.