ADVERTISEMENT

கரூர் துயர சம்பவம் : ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்த நீதிபதி!

Published On:

| By Kavi

கரூர் துயர சம்பவ வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் இன்று (அக்டோபர் 3) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழக கட்சியினருக்கு காட்டமான கேள்விகளை எழுப்பிய நீதிபதி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழுவை நியமித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share