ADVERTISEMENT

டெல்லியில் தவெக நிர்வாகிகளிடம் 3-வது நாளாக இன்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Published On:

| By Mathi

41 பேரை பலி கொண்ட கரூர் துயர சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன் ஆகியோரிடம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 31) 3-வது நாளாக விசாரணை நடைபெற உள்ளது.

கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் முதல் கட்ட விசாரணை நடத்திய அதிகாரிகள் தற்போது டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமா, மதியழகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதேபோல கரூர் ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்ட அதிகாரிகளிடமும் கரூர் துயரம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

ADVERTISEMENT

இந்த விசாரணை இன்று 3-வது நாளாக நடைபெற உள்ளது. இன்றைய விசாரணைக்கு தவெக நிர்வாகிகள் மற்றும் அரசு- காவல்துறை அதிகாரிகள் ஆஜராக உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share