கொட்டும் மழையில் உடன்பிறப்புகள்… பெரியார் விருதுடன் வெற்றி கனிமொழி சூளுரை!

Published On:

| By christopher

kanimozhi assure dmk victory will continue in 2026

கரூர் கோடங்​கிப்​பட்​டி​யில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கிய திமுக முப்​பெரும் விழா விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

நுழைவு வாயிலில் இருந்து வேனில் நின்றுகொண்டு கட்சித் தொண்டர்களை கையசைத்தபடியே பயணித்து மேடையேறினார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

தொடர்ந்து விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி பேசுகையில், ”ஆங்கிலத்தில் ‘All roads lead to rome’ என்று சொல்வார்கள். அதன்படி இன்று இந்தியாவின் பார்வையை கரூருக்கு திருப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு கனவு இருக்கும். எனக்கு இருக்கும் ஒரே கனவு, தலைவர் கலைஞர் பெற்ற பெரியார் விருதை இன்று பெற்றிருக்கிறேன். அதை நிறைவேற்றி தந்த முதலமைச்சர், திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொட்டும் மழையிலும் இங்கு நிற்கக் கூடிய உடன்பிறப்புகளை பார்க்கும்போது, இந்த படை போதுமா என கேட்கத் தோன்றுகிறது.

ADVERTISEMENT

அதோடு எந்த தேர்தலையும், எந்த பகைவர்களாக இருந்தாலும், அது நம்முடைய பரம்பரை பகைவர்களாக இருக்கட்டும், பாரம்பரிய பகைவர்களாக இருக்கட்டும், புதிதாக வரக்கூடியவர்களாக இருக்கட்டும். அத்தனை பேரையும் வென்றுகாட்டுவோம் என சூளுரைக் கூடிய இந்த படை போது வெற்றி நிச்சயம்” என கனிமொழி பேசினார்.

கனி​மொழிக்கு பெரி​யார் விருது வழங்கப்பட்டது போன்று பாளை​யங்​கோட்டை நகர்​மன்ற முன்​னாள் தலை​வர் சுப.சீத்​தா​ராமனுக்கு அண்ணா விருது, முன்​னாள் எம்​எல்ஏ சோ.​மா.​ராமச்​சந்​திரனுக்கு கலைஞர் விருது, மறைந்த தலை​மைச் செயற்​குழு உறுப்​பின​ரான குளித்​தலை சிவ​ராமன் குடும்​பத்​தா​ருக்கு பாவேந்​தர் பார​தி​தாசன் விருது, முரசொலி அறக்​கட்​டளை சார்​பில் மூத்த பத்​திரி​கை​யாளர் ஏ.எஸ்​.பன்​னீர்​செல்​வத்​துக்கு முரசொலி செல்​வம் விருது, சட்​டப்​பேரவை முன்​னாள் கொறடா மருதூர் ராமலிங்​கத்​துக்கு பேராசிரியர் விருது, முன்​னாள் அமைச்​சர் பொங்​கலூர் பழனி​சாமிக்கு மு.க.ஸ்​டா​லின் விருது ஆகியவற்றை வழங்​கி கெளரவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share