குஜராத்தில் இருந்து 12 மணிநேரம் தாமதமாக திருநெல்வேலி வந்த ஜாம்நகர் எக்ஸ்பிரஸ்- காரணம் என்ன?

Published On:

| By Minnambalam Desk

Jam Nagar Express

குஜராத்தின் ஜாம் நகரில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்ட ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 12 மணிநேரம் தாமதமாக வந்தடைந்தது. மங்களூரில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி வந்து சேருவதில் கடும் தாமதம் ஏற்பட்டது. Jamnagar Express Arrives 12 Hours Late in Tirunelveli from Gujarat – What Caused the Delay?

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்கள் வழியாக தமிழகத்தின் திருநெல்வேலிக்கு வாரம் 2 நாட்கள் ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 19578 ) இயக்கப்பட்டு வருகிறது.

ஜாம்நகரில் இருந்து கடந்த ஜூன் 13-ந் தேதி இரவு 9.30 மணிக்கு திருநெல்வேலிக்கு ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜூன் 15-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் இன்று காலை 7 மணிக்குதான் சுமார் 12 மணிநேரம் தாமதமாக வந்தடைந்தது.

கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கிறது. கர்நாடகாவின் மங்களூரு அருகே கனமழையால் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மங்களூர்- உடுப்பி இடையே ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த இடத்திலேயே சுமார் 7.30 மணிநேரம் ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நடுவழியில் பயணிகள் அனைவரும் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.

பின்னர் புறப்பட்ட ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7 மணிக்குதான் திருநெல்வேலியை வந்தடைந்தது. ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் சுமார் 12 மணிநேரம் தாமதமாக திருநெல்வேலியை வந்தடைந்தால் ரயிலில் பயணித்த பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

மேலும் இன்று காலை 5 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share