ADVERTISEMENT

ஜல்லிக்கட்டு, பில்கிஸ் பானு வழக்குகள்.. விஜய் வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழுவின் தலைவர் நீதிபதி அஜய் ரஸ்தோகி யார்?

Published On:

| By Mathi

Justice Ajay Rastogi

தமிழகத்தின் கரூரில் நடிகர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

சிபிஐ நடத்தும் விசாரணையை உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான 3 பேர் குழு கண்காணிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுவின் தலைவர் அஜய் ரஸ்தோகி பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர்.

யார் இந்த அஜய் ரஸ்தோகி?

ADVERTISEMENT
  • ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜஸ் ரஸ்தோகி.
  • ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக 2004-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றியவர்
  • 2018-ல் திரிபுரா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்
  • 2018 முதல் 2023-ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்
  • உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய போது, தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவின் கம்பளா போட்டிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர்.
  • முத்தலாக் வழங்குவது குற்றம் என தீர்ப்பளித்த வழக்கின் பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவர்.
  • தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுதான் நியமிக்க வேண்டும் என்கிற தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர்.
  • பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு குஜராத் அரசு கருணை காட்டுவது குறித்து பரிசீலனை செய்யலாம் என உத்தரவிட்ட நீதிபதிகளில் ஒருவர். இந்த உத்தரவின் அடிப்படையில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் 11 குற்றவாளிகளின் விடுதலை உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share