தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று (பிப்ரவரி 13) வெளியிட்ட அறிவிப்பில்,
“தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு ஏஐஜியாகவும்

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (மேற்கு) மதன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும்
திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையக) விஜயகுமார், திருநெல்வேலி மாநகர மேற்கு காவல் துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
