இந்திய ரயில்வேயில் 2,801 பணியிடங்கள்… 10ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி இருந்தால் போதும்!

Published On:

| By Santhosh Raj Saravanan

indian railway 2801 apprentice recruitment 2026

இந்திய ரயில்வேயின் தெற்கு மத்திய ரயில்வே (South Central Railway) மண்டலத்தில் 2,801 அப்ப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ (ITI) தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு அப்ரண்டிஸ் சட்டம் 1961ன் கீழ் நடைபெற உள்ளது. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

காலியிடங்கள் விவரம் (Vacancies Details)

இந்த அறிவிப்பின் மூலம் பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ADVERTISEMENT

முக்கிய பணிகள்:

  • எலக்ட்ரீஷியன்
  • ஃபிட்டர்
  • வெல்டர்
  • ஏ.சி மெக்கானிக்
  • டீசல் மெக்கானிக்
  • எலக்ட்ரானிக் மெக்கானிக்
  • மெஷினிஸ்ட்
  • கார்பென்டர்
  • பெயிண்டர்

மொத்தம் 2,801 அப்ரண்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ADVERTISEMENT

கல்வித் தகுதி

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்:

  • 10ம் வகுப்பு தேர்ச்சி (குறைந்தது 50% மதிப்பெண்)
  • சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ சான்றிதழ்

பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இந்த ஐ.டி.ஐ சான்றிதழ் என்.சி.வி.டி அல்லது எஸ்.சி.வி.டி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க:

  • குறைந்தபட்ச வயது : 15
  • அதிகபட்ச வயது : 24

அரசு விதிகளின்படி ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்

இந்த வேலைவாய்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு:

  • தொடக்கம் : மார்ச் 12, 2026
  • கடைசி தேதி : ஏப்ரல் 11, 2026

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த ஆட்சேர்ப்பில் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு இருக்காது.

பதிலாக:

  • 10ம் வகுப்பு மதிப்பெண்கள்
  • ஐ.டி.ஐ மதிப்பெண்கள்

அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரித்து தேர்வு செய்யப்படும்.

இந்த வேலைவாய்ப்பு மூலம் ரயில்வே துறையில் தொழில்நுட்ப பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைக்கும். அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ முடித்த இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share