கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடா? இந்திய அரசின் நடவடிக்கைகள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

indian government plan for LPG crisis 800000 metric tons of gas on its way to India

பெட்ரோலிய அமைச்சகம், (Petroleum Ministry) மார்ச் 26 நிலவரப்படி நம் நாட்டின் எரிசக்தி நிலவரம் குறித்த விரிவான தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட தடைகள் இருந்தபோதிலும், இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக கச்சா எண்ணெயைப் (Crude Oil) பெற்று வருகிறது. இந்தியா தனது உத்தியை மாற்றி, வளைகுடா நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தற்போது 41க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்து வருகிறது.

ADVERTISEMENT

60 நாட்களுக்கான எண்ணெய் இருப்பு:

இந்தியாவிடம் ஆறு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது என்ற செய்திகளை அமைச்சகம் திட்டவட்டமாக நிராகரித்தது. இந்தியாவிடம் மொத்தம் 74 நாட்களுக்கான கையிருப்புத் திறன் இருப்பதாக அரசாங்கம் தெளிவுபடுத்தியது. தற்போதைய உண்மையான கையிருப்பு 60 நாட்களுக்கு உள்ளது. இதில் கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் முக்கிய கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஆகியவை அடங்கும். நம் நாட்டில் உள்ள அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் 100% திறனுக்கு மேல் இயங்கி வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எல்பிஜி (LPG) பற்றாக்குறை மீது நடவடிக்கை:

உள்நாட்டு சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு இருமுனை உத்தியைக் (two-pronged strategy)கையாண்டுள்ளது. ஒருபுறம், அரசு உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளது. எல்பிஜி கட்டுப்பாட்டு உத்தரவுக்குப் பிறகு உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்கள் உற்பத்தியை 40% அதிகரித்துள்ளன. தற்போது இந்தியாவில் தினமும் 50,000 மெட்ரிக் டன் எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. மறுபுறம், இந்தியாவின் தேவைகளுக்காக, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் இருந்து 8 லட்சம் மெட்ரிக் டன் (MT) எல்பிஜி சரக்குகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சரக்குகள் இந்தியாவின் 22 இறக்குமதி முனையங்களைச் சென்றடையும்.

ADVERTISEMENT

வதந்திகள் காரணமாக கடந்த சில நாட்களில் 5 மில்லியனில் இருந்து 8.9 மில்லியனாக உயர்ந்திருந்த சிலிண்டர்களுக்கான தேவை, தற்போது 5 மில்லியனாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைத் தடுப்பதற்காக, வர்த்தக சிலிண்டர்களுக்கான ஒதுக்கீடு 50% அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share