கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு- ஆரஞ்ச் அலர்ட்- வால்பாறையில் லீவ்

Published On:

| By Minnambalam Desk

Rain Today

தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Rain Coimbatore Nilgiris

மேற்குதிசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

ஜூன் 27-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது.

இதனிடையே கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share