Weather: சென்னை உட்பட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை- சைதாப்பேட்டையில் 12 செ.மீ மழை பதிவு- விமான சேவைகள் பாதிப்பு!

Published On:

| By Mathi

Chennai Rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை (செப்டம்பர் 16) முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை சைதாப்பேட்டையில் 12 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 21-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானில் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்தெடுத்தது. இந்த கனமழையால் சாலைகளில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து பாய்ந்தோடியது.

ADVERTISEMENT

சென்னை புறநகர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டையிலும் 2 மணிநேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டியது.

சென்னையில் அதிகபட்சமாக சைதாப்பேட்டையில் 12 செ.மீ , மயிலாப்பூரில் 8 செ.மீ. மழை பெய்தது. அயனாவரத்தில் 7 செ.மீ, மேற்கு மாம்பலம், பெரம்பூர், தண்டையார் பேட்டையில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

ADVERTISEMENT

10 விமானங்கள் தாமதம்

சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 317 பயணிகளுடன் தோஹாவில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share