சென்னை அரசு இதழியல் நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்கி வைத்தார்.
இதழியல் துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சென்னையில் இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்றும் இதில் முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma in Journalism) 2025-2026 கல்வியாண்டு முதல் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்காக, ரூ.7.75 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
இக்கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ரவி, தலைமை இயக்குநராக மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கோட்டூர்புரத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழக அரசின் இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்கி வைத்தார். இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிறுவனத்தில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பு அளிக்கும் வண்ணம் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.