ADVERTISEMENT

25 உயிர்களைப் பறித்த கோவா ‘நைட்கிளப்’ தீ! தாய்லாந்தில் சிக்கிய உரிமையாளர்கள்! பாஸ்போர்ட்டை முடக்க இந்தியா அதிரடி!

Published On:

| By Santhosh Raj Saravanan

goa nightclub fire birch by romeo lane owners detained thailand passport revocation

கோவாவின் பிரபல நைட் கிளப்பான “பிர்ச் பை ரோமியோ லேன்” (Birch by Romeo Lane)-ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, நாட்டையே உலுக்கியது. இந்தச் சோகச் சம்பவத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், தப்பி ஓடிய கிளப் உரிமையாளர்கள் தற்போது தாய்லாந்தில் பிடிபட்டுள்ளது வழக்கில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

நடந்தது என்ன? வடக்கு கோவாவில் உள்ள அர்போரா (Arpora) பகுதியில் செயல்பட்டு வந்த “பிர்ச் பை ரோமியோ லேன்” என்ற நைட் கிளப்பில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து, ஒரு மரணப் பொறியாக மாறியது. முறையான தீயணைப்பு வசதிகள் இல்லாதது மற்றும் விதிமீறல் கட்டட அமைப்பு காரணமாக, பார்ட்டிக்கு வந்திருந்த 25 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

தாய்லாந்தில் சிக்கிய ‘லூத்ரா’ பிரதர்ஸ்: விபத்து நடந்தவுடன், கிளப்பின் இணை உரிமையாளர்களான சவுரப் லூத்ரா (Saurabh Luthra) மற்றும் தருண் லூத்ரா (Tarun Luthra) ஆகியோர் தலைமறைவாகினர். போலீஸ் விசாரணையில் அவர்கள் இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றது தெரியவந்தது. தற்போது கிடைத்த தகவலின்படி, இந்தச் சகோதரர்கள் இருவரும் தாய்லாந்தில் (Thailand) அந்நாட்டு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் (Detained).

மத்திய அரசு கிடுக்கிப்பிடி: இவர்களை இந்தியாவிற்குக் கொண்டுவர மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ADVERTISEMENT
  • பாஸ்போர்ட் ரத்து: சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயலும் லூத்ரா சகோதரர்களின் பாஸ்போர்ட்டுகளை ரத்து (Revoke) செய்ய வெளியுறவுத் துறை பரிசீலித்து வருகிறது. பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டால், அவர்கள் தாய்லாந்தில் தொடர்ந்து தங்க முடியாது; உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் (Deported).

தொடரும் விசாரணை: “பணம் சம்பாதிக்கும் ஆசையில் பாதுகாப்பு விதிகளைக் காற்றில் பறக்கவிட்டதுதான் இந்த விபத்திற்குக் காரணம்” என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவா காவல்துறையினர் லூத்ரா சகோதரர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கத் தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்.

25 குடும்பங்களின் கனவைக் கருக்கிய இந்தச் சம்பவத்தில், உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share