ஜென் இசட் என்று அழைக்கப்படும்இன்றைய இளம் தலைமுறையினர் (Gen Z) பற்றி ஒரு பொதுவான தவறான கருத்து உள்ளது. இவர்கள் எதையும் சிந்திக்காமல் பணத்தை செலவிடுவார்கள் என்ற கருத்து இருக்கிறடு. அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கைமுறையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்றும், முதலீடு போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று கருத்தும் இருக்கிறது. சமூக ஊடகங்கள், ஆன்லைன் ஷாப்பிங் ஆகியவை அதிகமாக இருக்கும் இந்த யுகத்தில், இளம் முதலீட்டாளர்கள் சேமிப்பை விட செலவினங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த மனநிலையை முற்றிலும் மாற்றும் அளவுக்கு ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
திட்டமிட்டு முதலீடு செய்யும் ஜென் இசட் தலைமுறையினர்:
ஒரு கணக்கெடுப்பின்படி, ஜென் இசட் மனநிலை இப்போது மாறிவிட்டது. இந்தத் தலைமுறையானது செலவினங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவுகளை எடுக்கின்றனர். குறிப்பிடத்தக்க வகையில், இளம் முதலீட்டாளர்கள் அதிக ஆபத்துள்ள விருப்பங்களை விட பாதுகாப்பான மற்றும் நிலையான முதலீடுகளை அதிகளவில் நம்பியுள்ளனர். கிரிப்டோ, பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள் போன்ற விருப்பங்களை விட தங்கம் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
அதிகரித்து வரும் பணவீக்கம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், ஜென் Z தலைமுறையினர் தங்கள் பணத்தின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, அதில் உள்ள அபாயங்களைப் புரிந்துகொள்கின்றனர். இளம் முதலீட்டாளர்கள் இப்போது உணர்ச்சிவசப்படாமல், புரிந்துணர்வுடனும் திட்டமிடலுடனும் முதலீடு செய்கிறார்கள் என்பதை இந்த சர்வே தெளிவாகக் காட்டுகிறது. இந்த மாற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
18 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களிடம் கணக்கெடுப்பு:
இந்திய இளைஞர்கள் தங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதை வாங்கும் விதம் மெல்ல மெல்ல மாறுகிறது. 18 முதல் 39 வயதுடைய 5,000 நுகர்வோர் மத்தியில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பு, பாரம்பரிய கொள்முதல் படிப்படியாக எவ்வாறு தனிப்பட்ட, தர்க்க அடிப்படையிலான அணுகுமுறைக்கு வழிவகுக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 66.7% பேருக்கு, வாங்குதல்கள் பெரும்பாலும் தனிப்பட்ட முடிவுகளாகும் என்றும், 61.9% பேர் தங்களுடைய மிகச் சமீபத்திய தங்கம் 5 கிராமுக்கும் குறைவாக வாங்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். ஜென் Z மற்றும் மில்லினியல்கள் தங்கத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இது பிரதிபலிக்கிறது.
தங்கம்தான் பாதுகாப்பான முதலீட்டு விருப்பம்:
இந்த சர்வேயில் பதிலளித்தவர்களில் 61.9% பேர், இன்று முதலீடு செய்ய 25,000 ரூபாய் இருந்தால் மியூச்சுவல் ஃபண்டுகள் (16.6%), ஃபிக்ஸட் டெபாசிட்கள் (13%), பங்குகள் (6.6%) மற்றும் கிரிப்டோ (1.9%) ஆகியவற்றை விட தங்கத்தைத் (Gold Investment) தேர்ந்தெடுப்போம் என்று கூறியுள்ளனர். பொருளாதார நிச்சயமற்ற காலங்களில், 65.7% பேர் வங்கி சேமிப்பு, பரஸ்பர நிதிகள் அல்லது ஈக்விட்டிகளுடன் ஒப்பிடும்போது தங்கம் பாதுகாப்பான விருப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். ஜென் இசட் மற்றும் மில்லினியல்கள் ஆகிய இரண்டு பிரிவினருக்கும் நிதி பின்னடைவாக தங்கத்தின் நீடித்த பங்கை இந்த முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
