ஆந்திராவில் டாடா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீவிபத்து- 2 பெட்டிகள் தீக்கிரை; ஒருவர் பலி!

Published On:

| By Mathi

Train accident

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆந்திரா மாநிலத்தில் திடீரென தீ பிடித்தது. இவ்விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் டாடா நகர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி டாடா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஆந்திரா மாநிலம் எலமஞ்சில்லி ரயில் நிலையத்துக்கு வந்த போது திடீரென ஏசி பெட்டிகளில் தீப்பிடித்தது.

ADVERTISEMENT

இதில் ரயிலின் 2 பெட்டிகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share