சிம் கார்டு வேண்டாம், டவர் வேண்டாம்… எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி! “டைரக்ட் டூ செல்” – இந்தியாவுக்கு எப்போ வரும்?

Published On:

| By Santhosh Raj Saravanan

elon musk starlink direct to cell satellite internet india launch status security issues tamil news

இணையவேகம் என்று வந்துவிட்டாலே “நெட்ஒர்க் கிடைக்கல, சுத்துது” என்ற புலம்பல் நமக்குச் சகஜம். ஆனால், அந்தப் பிரச்சனையே இல்லாமல், வானத்திலிருந்து நேரடியாக உங்கள் மொபைலுக்கே இன்டர்நெட் வந்தால் எப்படி இருக்கும்? எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்‘ (Starlink) திட்டம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. தற்போது 2026-ம் ஆண்டிற்கான அவர்களின் புதிய அறிவிப்புகள் தொழில்நுட்ப உலகத்தையே மிரள வைத்துள்ளன.

2026-ல் என்ன புதுமை? – “டைரக்ட் டூ செல்” (Direct to Cell) இனி இன்டர்நெட் பயன்படுத்தத் தனியாக டிஷ் (Dish) ஆண்டெனா எதுவும் தேவைப்படாது. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் இருந்து நேரடியாக உங்கள் ஸ்மார்ட்போனுக்கே சிக்னல் வரும் தொழில்நுட்பத்தை (Direct to Cell) ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனம் வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

ADVERTISEMENT
  • இது தற்போது குறுஞ்செய்தி (Text) அனுப்பும் வசதியுடன் பயன்பாட்டில் உள்ளது.
  • 2025-26 காலகட்டத்தில் குரல் அழைப்புகள் (Voice) மற்றும் டேட்டா (Data) வசதிகளும் நேரடியாக மொபைலுக்கே கிடைக்கும் வகையில் இது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
  • காடு, மலை, நடுக்கடல் என எங்குச் சென்றாலும் இனி “நோ சிக்னல்” என்ற வார்த்தையே இருக்காது.

செயற்கைக்கோள்கள் மாற்றம்: இணைய வேகத்தை அதிகரிக்கவும், விண்வெளியில் குப்பைகள் சேருவதைத் தவிர்க்கவும் ஒரு பெரிய மாற்றத்தை ஸ்டார்லிங்க் கையில் எடுத்துள்ளது. இதுவரை பூமியில் இருந்து சுமார் 550 கி.மீ உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை, 2026-ம் ஆண்டுக்குள் 480 கி.மீ உயரத்திற்குக் கீழே இறக்கத் திட்டமிட்டுள்ளனர்.

  • பயன்: பூமிக்கு அருகில் வருவதால் இன்டர்நெட் வேகம் தாறுமாறாக இருக்கும் (Low Latency).
  • பாதுகாப்பு: ஒருவேளை செயற்கைக்கோள் பழுதானால், அது விண்வெளியிலேயே சுற்றிக்கொண்டிருக்காமல், புவிஈர்ப்பு விசையால் விரைவில் கீழே இழுக்கப்பட்டு எரிந்துவிடும். இதனால் விண்வெளி குப்பை (Space Debris) சேராது.

இந்தியாவில் எப்போது வரும்? – தொடரும் சிக்கல்! உலகம் முழுவதும் சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் ஸ்டார்லிங்க் கலக்கிக் கொண்டிருந்தாலும், இந்தியாவில் அதன் என்ட்ரி தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

ADVERTISEMENT
  • பாதுகாப்பு கவலை: சமீபத்தில் மணிப்பூர் மற்றும் அந்தமான் பகுதிகளில், ஸ்டார்லிங்க் கருவிகள் சட்டவிரோதமான முறையில் பயன்பட்டதைக் கண்டறிந்த இந்தியப் பாதுகாப்புத் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
  • அரசின் கெடுபிடி: பயங்கரவாதிகள் அல்லது கடத்தல்காரர்கள் இதைப் பயன்படுத்தினால் டிராக் (Track) செய்வது கடினம் என்பதால், “எங்களுக்கு முழுமையான தரவுப் பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டும்” என்று இந்தியத் தொலைத்தொடர்புத் துறை (DoT) கறாராகக் கூறிவிட்டது.
  • உரிமம் (License) கிடைப்பதில் உள்ள இந்த இழுபறியால், இந்திய மக்கள் இந்தச் சேவையை அனுபவிக்க இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

எலான் மஸ்க்கின் இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் செல்போன் டவர்களே இல்லாத உலகத்தை நாம் பார்க்கலாம். ஆனால், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்பதால், ஸ்டார்லிங்க் இந்தியாவின் கதவைத் தட்ட இன்னும் சில காலம் ஆகும் என்பது மட்டும் உறுதி.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share