CIBIL ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் என்பது கடன்களைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பிரதிபலிக்கும் மூன்று இலக்க எண் அளவீடு ஆகும்.
வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்த ஸ்கோரைப் பயன்படுத்தி நீங்கள் கடன் அல்லது கிரெடிட் கார்டைப் பெற முடியுமா என்பதைத் தீர்மானிக்கின்றன. குறுகிய காலத்தில் தங்கள் CIBIL ஸ்கோரை மேம்படுத்த முடியுமா என்று பலர் நினைக்கின்றனர். அது முடியும். குறுகிய காலத்தில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பது சவாலானதாகத் தோன்றலாம். ஆனால் சரியான உத்தியுடன் அதை சாத்தியமாக்கலாம்.
சரியான நேரத்தில் பில் செலுத்துதல்: உங்கள் CIBIL ஸ்கோரை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமான விதி, பணம் செலுத்துவதை ஒருபோதும் தாமதப்படுத்தக்கூடாது. அது கிரெடிட் கார்டு பில், கடன் EMI அல்லது வேறு ஏதேனும் கட்டணமாக இருந்தாலும் உரிய தேதிக்கு முன்பே செலுத்துவது நல்லது. தாமதங்கள் அல்லது தவணை மிஸ் ஆனால் உங்கள் ஸ்கோரைப் பாதிக்கலாம்.
கிரெடிட் கார்டால் நன்மை: நீங்கள் இதற்கு முன்பு எந்த கிரெடிட்டையும் வாங்கவில்லை என்றால், உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் இல்லை என்று அர்த்தம். இது ஆரம்பத்தில் நன்றாகத் தோன்றினாலும், உங்களுக்கு கடன் தேவைப்படும்போது இது ஒரு பிரச்சனையாக மாறலாம். கிரெடிட் கார்டு (Credit Card) வைத்திருப்பது உங்கள் கிரெடிட் வரலாற்றை உருவாக்குகிறது. இது எதிர்காலத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற உதவும்.
கிரெடிட் வரம்பு: நல்ல CIBIL ஸ்கோரைப் பராமரிக்க உங்கள் மொத்த கிரெடிட் வரம்பில் 30%க்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது முக்கியம். எடுத்துக்காட்டாக, உங்கள் வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தால், உங்கள் செலவை 30,000 ரூபாய்க்கு கீழ் வைத்திருக்க முயற்சிக்கவும். இது உங்கள் CIBIL ஸ்கோரை மேம்படுத்த உதவும்.
வரம்பை அதிகரிக்க விண்ணப்பிக்கவும்: நீங்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்தி குறைந்த கிரெடிட் பயன்பாட்டைக் கொண்டிருந்தால், உங்கள் வங்கியிடமிருந்து கிரெடிட் வரம்பு அதிகரிக்கச் சொல்லி கேட்கலாம். அதிகரித்த வரம்பு ஒரு பொறுப்பான வாடிக்கையாளராக உங்கள் பொறுப்பை எடுத்டுக் காட்டும். இருப்பினும், வரம்பு அதிகரிப்பிற்குப் பிறகு அதிகப்படியான செலவினங்களைத் தவிர்ப்பது முக்கியம்.
பாதுகாப்பான கிரெடிட் கார்டைத் தேர்வுசெய்யவும்: பண ஆதரவுடன் கூடிய கிரெடிட் கார்டுகள் உங்கள் CIBIL மதிப்பெண்ணை விரைவாக மேம்படுத்த எளிதான வழியாகும். நீங்கள் வங்கியில் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்தால் போதும். அது உங்கள் கடன் வரம்பாக மாறும். இது வங்கிக்கு பாதுகாப்பானது. மேலும் புதிய பயனர்கள் எளிதாக கிரெடிட் கார்டைப் பெறலாம். அதே நேரத்தில் அவர்களின் மதிப்பெண்ணை விரைவாக மேம்படுத்தலாம்.
ஒரே நேரத்தில் பல கடன்கள்: ஒரே நேரத்தில் பல கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் குறித்து கேள்விகளை எழுப்பலாம். இது வங்கிகள் உங்களை அதிக ஆபத்துள்ள வாடிக்கையாளராகக் கருத வழிவகுக்கும். உங்கள் கடன் வரம்பில் இருப்பதும், வெவ்வேறு கடன்களுக்கு இடையில் போதுமான இடைவெளியைப் பராமரிப்பதும் சிறந்தது.
