ஈரான் நாட்டின் அதி உயர் தலைவரான கமெனி கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால் ஈரான் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவ்ம் இணைந்து உக்கிர தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஈரானில் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் முகாம்களை இலக்கு வைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் ஈரானின் அதி உயர் தலைவரான கமெனி கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை மறுத்துள்ளது ஈரான். கமெனி பாதுகாப்புடனும் நலமுடனும் இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.
