நாளை மறுநாள் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிள்ள அறிக்கையில், “கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 23.09.2025 செவ்வாய் கிழமை, காலை 10 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும். இதில் தி.மு.க. மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.