2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கை: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள் – வணிக அமைப்புகள் – இளைஞர்கள் – விவசாய அமைப்புகள் – தொழிலாளர் அமைப்புகள் – தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட தலைமைக் கழகத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:
தலைமை: கனிமொழி கருணாநிதி, (துணைப் பொதுச் செயலாளர்)
- டி.கே.எஸ். இளங்கோவன் (செய்தித் தொடர்பு தலைவர்)
- கோவி.செழியன் (வர்த்தகர் அணி துணைத் தலைவர்)
- பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர்)
- டி.ஆர்.பி. ராஜா, (தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்)
- எம்.எம். அப்துல்லா, (அயலக அணிச் செயலாளர்)
- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (செய்தித் தொடர்பு செயலாளர்)
- எழிலன் நாகநாதன் (மருத்துவ அணிச் செயலாளர்)
- கார்த்திகேய சிவசேனாபதி (சுற்றுச்சூழல் அணிச் செயலாளர்)
- ஆ. தமிழரசி ரவிக்குமார் (மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்)
- ஜி.சந்தானம், இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு)
- சுரேஷ் சம்பந்தம் (ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு [Convenor, Dream Tamilnadu])
