டெல்லிக்கு கேட்கிற மாதிரி… ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’- கொட்டும் மழையில் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் ஸ்டாலின் உறுதியேற்பு!

Published On:

| By Mathi

DMK Stalin Karur

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதியேற்றார்.

கரூரில் திமுகவின் முப்பெரும் விழா இன்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. இந்த பெருவிழாவின் இறுதியாக, ” இந்த கரூர் மண்ணில் நின்று..தந்தை பெரியார் பிறநத நாளில் உரக்க சொல்வோம்.. ‘தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன்’… டெல்லிக்கு கேக்குற மாதிரி எல்லோரும் சேர்ந்து சொல்லனும்..என சொல்லிவிட்டு,

ADVERTISEMENT

“தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன்

தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன்

ADVERTISEMENT

தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன்” என 3 முறை உரத்து சொன்னார் முதல்வர் ஸ்டாலின்.

முப்பெரும் விழாவில் பங்கேற்ற திமுக தொண்டர்களும், இதே முழக்கத்தை விண்ணதிர உரத்து முழங்கினர்.

ADVERTISEMENT

இதன் பின்னர், ” தமிழ்நாடு போராடும்- தமிழ்நாடு வெல்லும்- தமிழ்நாடு போராடும்- தமிழ்நாடு வெல்லும்” என 2 முறை உரத்து முழங்கி தமது உரையை நிறைவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share