வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும்.
இதனைத் தொடர்ந்து நாளை ஆகஸ்ட் 19-ந் தேதி முற்பகல் வாக்கில் தெற்கு ஒடிஷா- வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் இது கரையை கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.