மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ரெடி: விரைவில் நல்ல செய்தி!

Published On:

| By Santhosh Raj Saravanan

DA hike confirmed at 60 percent for central govt employees

அகவிலைப்படி உயர்வு (DA Hike) அறிவிப்புக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. AICPI குறியீட்டு தரவு கணக்கீடு மூலம் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2025 டிசம்பர் மாதத்துக்கான AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த குறியீட்டில் நல்ல ஏற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. டிசம்பர் மாதத்துக்கான அகில இந்திய CPI-IW குறியீடு 148.2 புள்ளிகளாக இருந்தது. நவம்பர் மாதத்திற்கான AICPI குறியீடும் அதே (148.2 புள்ளிகள்) அளவில் இருந்தது.

2025 டிசம்பர் மாதத்திற்கான பணவீக்கம் 3.13% ஆக இருந்தது. இது 2024 டிசம்பர் மாதம் 3.53% ஆக இருந்தது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மொத்த DA மதிப்பெண் 45.58 சதவீதமாக இருந்தது. இது AICPI குறியீட்டு புள்ளிவிவரங்களைப் பொறுத்து 2023 ஜூன் மாதம் 46.24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

DA 60 சதவீதமாக அதிகரிக்கலாம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது 60 சதவீத விகிதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புன் உள்ளடு. இது தொடர்பான அறிவிப்பு மார்ச் மாதத்தில் அரசாங்கத்தால் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சூத்திரம், அகவிலைப்படியை உயர்த்துவதற்காகப் பின்பற்றப்படுகிறது.

மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படலாம்: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது. முதலாவது திருத்தம் ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படுகிறது. இரண்டாவது திருத்தம் ஜூலை முதல் டிசம்பர் வரை வழங்கப்படுகிறது. இதற்கிடையில், புதிய DA விகிதங்களை அரசாங்கம் அறிவிக்கும் வரை, ஊழியர்களுக்கு 58 சதவீத DA வழங்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், DA உயர்வை அரசாங்கம் அறிவித்தவுடன் அதிகரித்த தொகை நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும்.

ADVERTISEMENT

அக்டோபரில் DA அதிகரித்தது: 2025 அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை வெளியிட ஒப்புதல் அளித்தது. இது விலைவாசி உயர்வை ஈடுசெய்ய 01.07.2025 முதல் நடைமுறைக்கு வரும். இது அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 55% விகிதத்தை விட 3% அதிகமாகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share