தவெக கூட்டணி பேச்சுவார்த்தை: வதந்திகளைப் பரப்பும் திமுக – சிடிஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

CTR

கூட்டணி குறித்துப் பொதுமக்களிடையே குழப்பத்தை விளைவிப்பதற்காக, திமுகவினரால் ஆதாரமற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிடிஆர் நிர்மல் குமார் இன்று (மார்ச் 16) தனது எக்ஸ் பதிவில், ” சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் ஆகியோரை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

ADVERTISEMENT

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

ADVERTISEMENT

இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.

பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்!” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share