குஜராத், கேரளாவில் கிடுகிடு உயர்வு- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6,000-த்தை கடந்தது!

Published On:

| By Minnambalam Desk

Coronavirus

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று ஜூன் 9-ந் தேதி காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் 6,133 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். COVID-19 Spike

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை (ஜனவரி 1 முதல்) 6,133 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. குஜராத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முக கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற மத்திய அரசும் மாநில அரசுகளும் அறிவுறுத்தி உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share