இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று ஜூன் 9-ந் தேதி காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் 6,133 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். COVID-19 Spike
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை (ஜனவரி 1 முதல்) 6,133 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. குஜராத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முக கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற மத்திய அரசும் மாநில அரசுகளும் அறிவுறுத்தி உள்ளன.