சென்னை மெட்ரோ ரயில்களில் (Chennai Metro Rail) ஜூலை மாதத்தில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாகவும், ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11,58,910 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


நடப்பாண்டு
- ஜனவரி மாதத்தில் 86,99,344
- பிப்ரவரி மாதத்தில் 86,65,803
- மார்ச் மாதத்தில் 92,10,069
- ஏப்ரல் மாதத்தில் 87,89,587
- மே மாதத்தில் 89,09,724
- ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
- அதிகபட்சமாக 04.07.2025 அன்று 3,74,948 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் மட்டும்
- பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 6,55,991
- க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 45,66,058
- CMRL Mobile App 1,55,729
- Single journey Paper QR /Token 20,78,278
- Static QR 3,07,083
- Whatsapp – 6,12,717
- Paytm 4,18,788;
- PhonePe – 3,33,902
- ONDC – 6,59,561)
- சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 51,56,786 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp – (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.
மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.