மத்திய அரசு பாடத் திட்ட தேர்வு வாரியமான
சிபிஎஸ்இ (CBSE)-ன் 10-ம் வகுப்பு கணக்கு வினாத்தாள் கடுமையாக இருந்ததாகவும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கின. இதில் Basic Mathematics கணக்கு வினாத்தாள் மிக கடுமையாக இருந்ததாக நாடு முழுவதும் புகார்கள் எழுந்துள்ளன. பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்தும் கூட கணக்கு வினாக்கள் கேட்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இதனால் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணிதத் தேர்வில் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அல்லது மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
