ADVERTISEMENT

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு போர்டு எக்ஸாம் பயமா? சிபிஎஸ்இ (CBSE) மாணவர்களுக்கு இலவச கவுன்சிலிங்… இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

cbse board exams 2026 free counselling toll free number

“போர்டு எக்ஸாம் வருதுன்னாலே காய்ச்சல் வருதே… படிச்சதெல்லாம் மறந்த மாதிரி இருக்கே?” என்று புலம்பும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களா நீங்கள்? ரிலாக்ஸ் ப்ளீஸ்!

உங்கள் தேர்வு பயத்தைப் போக்க, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஒரு சூப்பர் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. மாணவர்களுக்கான முதற்கட்ட உளவியல் ஆலோசனை (Psycho-Social Counselling) சேவையை சிபிஎஸ்இ தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

எதுக்கு இந்த கவுன்சிலிங்?

பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் (Stress), பதற்றம் மற்றும் தேர்வு தொடர்பான சந்தேகங்களைத் தீர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு. கடந்த 26 ஆண்டுகளாக இந்தச் சேவையை சிபிஎஸ்இ வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

எப்படித் தொடர்பு கொள்வது?

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் ஆலோசனைகளைப் பெறலாம்.

ADVERTISEMENT
  • Toll-Free Number: 1800-11-8004
  • நேரம்: இந்தச் சேவை 24 மணி நேரமும் செயல்படும்.

என்னென்ன வசதிகள் இருக்கு?

IVRS சேவை: மேற்கண்ட நம்பருக்கு கால் செய்தால், ஐவிஆர்எஸ் (IVRS) முறையில் தானியங்கி ஆலோசனைகள் கிடைக்கும்.

  • தேர்வுக்கான டிப்ஸ்.
  • நேர மேலாண்மை (Time Management).
  • மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகள்.
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs).

பாட்காஸ்ட் (Podcasts): “கால் பண்ணிக் கேட்கத் தயக்கமா இருக்கா?” கவலை வேண்டாம். சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ ‘ஷிக்ஷா வாணி’ (CBSE Shiksha Vani) செயலியில் பாட்காஸ்ட் மூலமாகவும் ஆலோசனைகளைக் கேட்கலாம்.

மொழி என்ன?

இந்த ஆலோசனைகள் ஆங்கிலம் (English) மற்றும் இந்தி (Hindi) ஆகிய இரண்டு மொழிகளிலும் வழங்கப்படும்.

பயந்துகிட்டு படிச்சா மண்டையில ஏறாது. தெளிவா இருங்க!

  • சும்மா ட்ரை பண்ணுங்க: உங்களுக்குப் பெரிதாகப் பயம் இல்லை என்றாலும், சும்மா இந்த நம்பருக்குக் கால் செய்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள். ஏதாவது ஒரு ‘டிப்ஸ்’ நிச்சயம் உங்கள் மார்க்கை உயர்த்த உதவும்.
  • பெற்றோர்களே கவனியுங்க: உங்கள் பிள்ளை சோர்ந்து போய் இருந்தால், நீங்களே இந்த நம்பரில் பேசி அவர்களுக்குத் தைரியம் சொல்லலாம்.
  • இரண்டாம் கட்டம்: இது முதற்கட்டம்தான். தேர்வுகள் முடிந்த பிறகும் ரிசல்ட் நேரத்தில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கும்.

படிப்பது எவ்வளவு முக்கியமோ, மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்வதும் அவ்வளவு முக்கியம். ஆல் தி பெஸ்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share