கரூர் துயர சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் இன்றும் (ஜனவரி 13) விசாரணை நடத்த உள்ளனர்.
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். இந்த துயர சம்பவம் தொடர்பாக தற்போது டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக்காக நேற்று விஜய் ஆஜரானார். அவரிடம் கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 7 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து 2-வது நாளாக இன்றும் இந்த விசாரணை நடைபெற உள்ளது.
ஏற்கனவே தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர். இதனையடுத்து தற்போது விஜய்யிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
