தமிழக முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின நாளில் சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகளை வழங்கினார். சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு ஆவடி மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆகஸ்ட் 15-ந் தேதி தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து முதல்வர் சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
சிறந்த மாநகராட்சி
முதல் பரிசு – ஆவடி
இரண்டாம் பரிசு – நாமக்கல்
சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலம்
முதல் பரிசு – 6 வது மண்டலம்
இரண்டாம் பரிசு – 13 வது மண்டலம்
சிறந்த நகராட்சி
முதல் பரிசு – ராஜபாளையம்
இரண்டாம் பரிசு – ராமேஸ்வரம்
மூன்றாம் பரிசு – பெரம்பலூர்
சிறந்த பேரூராட்சி
முதல் பரிசு – காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர்
இரண்டாம் பரிசு – திருச்சி மாவட்டம் காட்டுப்புதூர்
மூன்றாம் பரிசு – திண்டுக்கல் மாவட்டம் நத்தம்