பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணியின் பதவி காலம் முடிவடைந்துவிட்டது என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Anbumani’s PMK ‘President’ Term Has Ended, Says Dr. Ramadoss
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ஜூன் 12-ந் தேதி இன்று செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது: அன்புமணியின் தலைவர் பதவி காலம் 3 ஆண்டுகள். இந்த 3 ஆண்டுகாலம் முடிவடைந்துவிட்டது.
பாமகவின் பொதுக்குழு மீண்டும் கூடி, புதிய தலைவரை தேர்ந்தெடுப்போம். பாமகவின் நிறுவனர் (ராமதாஸ்) எப்ப நினைக்கிறாரோ அப்போது பாமகவின் பொதுக்குழு கூட்டப்படும்.
பாமக, எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நான்தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.