தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில மணி நேரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதிமுக ஆட்சி மன்றக் குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆட்சி மன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியும், அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, வேணுகோபால், ஜஸ்டின் செல்வராஜ், இன்பதுரை குழுவில் உள்ளனர்.


