சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. திருச்செந்தூர் நோக்கி 600 சிறப்பு பேருந்துகள்!

Published On:

| By Mathi

Tiruchendur Special Buses

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு ஜூலை 4-ந் தேதி முதல் ஜூலை 8-ந் தேதி வரை 600க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. Tiruchendur Special Buses

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ஜூலை 4-ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் சென்னை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், கோவை, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை உட்பட மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகள் ஜூலை 4-ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 8-ந் தேதி வரை இயக்கப்படும்.


மேலும் திருச்செந்தூரில் 3 தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து தலா 10 சிறப்பு பேருந்துகள் வீதம் 30 சிறப்பு பேருந்துகள், முருகன் கோவில் வாசல் வரை இயக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார்..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share