6 எம்.பி இடங்கள்.. சட்டசபை தேர்தலுக்கு முன் மாநிலங்களவை தேர்தல்?

Published On:

| By Mathi

Rajyasabha Election

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் (ராஜ்யசபா எம்.பி) இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வர இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு, அதிமுக தம்பிதுரை, தமாகா ஜிகே வாசன் ஆகியோரது பதவி முடிவடைகிறது.

இதனையடுத்து 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்படும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் களைகட்டும் நிலையில் மாநிலங்களவை தேர்தலும் நடைபெற இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளிலும் ராஜ்யசபா சீட்டை உறுதி செய்வதில் கட்சிகள் கவனம் செலுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share