11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று (ஜூலை 31) வெளியிட்டுள்ள உத்தரவில்,

ADVERTISEMENT

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக்கிற்கு இயற்கை வளங்கள் துறை ஒதுக்கி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிதித்துறை சிறப்பு செயலாளர். பிரசாந்த் வடநெரே நிதித்துறை (செலவினம்) செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் ராஜகோபால் சுன்கரா, நிதித்துறை இணைச் செயலாளராகவும்,

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனராகவும்,

ADVERTISEMENT

அருங்காட்சியகங்கள் இயக்குனர் கவிதா ராமு, தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனராகவும்,

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கஜலட்சுமி, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராகவும்,

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையகர இயக்குனர் முரளிதரன், மீன்வளம் மற்றும் மீனவர் நல இயக்குனராகவும்,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் கிரண் குராலா, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக ஆணையராகவும்,

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சமீரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனராகவும்,

ஈரோடு, வணிகவரி (மாநில வரிகள்) இணை ஆணையர் தாக்கரே சுபம், கோவை வணிகவரி இணை ஆணையராகவும்,

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர், சென்னை வணிகவரி (அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share