45 ஆண்டுக்கு பின் தாஜ்மஹாலை தொட்ட யமுனா!

Published On:

| By christopher

45 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தாஜ்மஹாலின் வெளிப்புற சுவரை யமுனா நதி நீர் தொட்டு செல்லும் காட்சியை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தென்மேற்கு பருவ மழை கடந்த மாதம் தொடங்கியதில் இருந்து டெல்லி, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் யமுனா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றங்கரையோரம் இருக்க கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக யமுனை நதியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. ஆனால் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையால் மதுராவின் ஓக்லா மற்றும் கோகுல் ஆகிய இரண்டு தடுப்பணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் இன்று காலை மீண்டும் அபாய கட்டத்தை தாண்டி 205.35 மீட்டரை எட்டியதால் தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

Delhi: Yamuna river water level rises, over 10,000 evacuated

மேலும் உத்தரபிரதேசத்தின் ஆக்ரா வழியாக செல்லும் யமுனா நதி, சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக  உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலின் வெளிப்புற சுவரை தொட்டு செல்கிறது.

முன்னதாக, 1978ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது யமுனா நதியின் நீர் தாஜ்மஹால் சுவரைத் தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தாஜ்மஹாலை தழுவி செல்லும் யமுனா நதியின் இந்த ஆச்சரியமான காட்சியைக் காண அங்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

https://twitter.com/TasilJazz/status/1681540890110701569?s=20

இதற்கிடையே பெருக்கெடுத்து ஓடும் யமுனா வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர்வாசிகள், தாஜ்மஹாலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்று அச்சமடைந்துள்ளனர்.

இந்தியாவின் மத்திய நீர் ஆணையத்தின் (CWC) படி, தாஜ்மஹாலை ஒட்டி ஆக்ராவில் ஓடும் யமுனா நதியின் நீர்மட்டம் அபாய அளவான 151. 4 மீட்டரை தாண்டி நேற்று மாலை 152 மீட்டர் (499 அடி) ஆக உயர்ந்தது.

இதுகுறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏஎஸ்ஐ) கண்காணிப்பாளர் ராஜ் குமார் படேல் கூறுகையில், ”தாஜ்மஹால் வடிவமைப்பு வெள்ளத்தைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தின் போது கூட, தாஜ்மஹால் உட்புறம் தண்ணீர் நுழைவதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து மழை பெய்தால், நிலைமை மீண்டும் மதிப்பீடு செய்யப்படும்.

அதேவேளையில் 1600 களில் கட்டப்பட்ட “பேபி தாஜ்” என்று அழைக்கப்படும் இதிமாத்-உத்-தௌலாவின் கல்லறை மற்றும் அதே காலகட்டத்தைச் சேர்ந்த மெஹ்தாப் பாக் ஆகியவை சேதமடைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

அனைத்துக்கட்சி கூட்டம்: அதிமுக சார்பில் பங்கேற்கும் ஓ.பி.ரவீந்திரநாத்

சோதனைக்கு பின்… பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்முடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share