ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். லோகோவில் இருந்த நீல நிற பறவைக்கு பதிலாக வேறு லோகோவை மாற்றினார்
அடுத்தடுத்த நாட்களில் ட்விட்டர் என்ற பெயரையே X என்று மாற்றி ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் என்றும் அறிவித்தார். இது போன்ற அறிவிப்புகளால் பயனாளர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.
இவ்வாறாக பல மாற்றங்களை கண்டு வந்த X (ட்விட்டர்) தளம் இப்போது மிகப் பெரிய அதிர்ச்சியை பயனாளர்களுக்கு அளித்துள்ளது. X நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது. “இனி கருத்துகளை பதிவிடுவதற்கும், மற்றவர்களின் பதிவுகளுக்கு பதிலளிக்கவும் விருப்பம் தெரிவிக்கவும் ஆண்டு ஒன்றிற்கு 1 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 83 ரூபாய்) செலுத்த வேண்டும்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் பயனாளர்களுக்கு சோதனை திட்டமாக இந்த சந்தா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு இந்த இரண்டு பகுதிகளில் உள்ள பயனாளர்களுக்கு மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ள சந்தா திட்டம், புதிதாக X தளத்தில் இணையும் பயனாளர்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது.
இந்த சந்தா நாட்டிற்கு நாடு மாறுபடும் இதற்கு “நாட் எ பாட்” என பெயரிடப்பட்டுள்ளது, இதனால் ஏற்கனவே உள்ள பயனாளர்கள் பாதிப்படைய மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
சந்தாவை சப்ஸ்கிரைப் செய்ய விரும்பாத புதிய பயனாளர்கள் வீடியோ மற்றும் போஸ்டுகளை பார்க்க, படிக்க மற்றும் கணக்குகளை பின்தொடர மட்டுமே முடியும். கமெண்ட் செய்யவோ புதிய பதிவுகளை பதிவிடவோ முடியாது.
-பவித்ரா பலராமன்
கார்த்தியின் “ஜப்பான்” டீசர் வெளியானது!
சசிகுமார் படத்திற்காக ஈசிஆரில் கிராமம் செட்!
’ஏய்… சத்யா… யார் மேல கை வைக்கிறே?’ எடப்பாடி கண் முன்னே மோதிக் கொண்ட மா.செ.க்கள்!