தொகுதி மறு சீரமைப்பு: தென் மாநிலங்களுக்கு மட்டும்தான் பாதிப்பா?

Published On:

| By Minnambalam Desk

பனோஜ்யோத்ஸ்னா லாஹிரி, நதீம் கான், இம்ரான் அன்சார் Delimitation affect the southern states

தொகுதி மறுசீரமைப்பு குறித்த விவாதம் தென்னிந்தியாவை வடக்கிற்கு எதிராக நிறுத்தியுள்ளது. அதிகரித்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காகத் தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்யும் செயல்முறை, தென் மாநிலங்களைத் தண்டிக்கும் என்று தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். Delimitation affect the southern states

இந்த மாநிலங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன. எனவே, அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால், இம்மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய பிரதிநிதிகளின் விகிதம் குறைவாக இருக்கும். அதாவது அதிக மக்கள்தொகையுள்ள வட மாநிலங்களைவிடவும் குறைவாகவே இருக்கும்.

ஆனால் இழப்பு தென் மாநிலங்களுக்கு மட்டுமல்ல. கடந்த காலங்களில் எப்படி எல்லை மறுசீரமைப்பு நடத்தப்பட்டது என்பதைக் கவனித்தால் தலித், முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதித்துவமும் குறைவடைய வாய்ப்பு உள்ளதைக் காணலாம்.

மறுசீரமைப்பு என்றால் என்ன? Delimitation affect the southern states

அரசியலமைப்பின் 82, 170 பிரிவுகள், ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் மக்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் உள்ள இடங்களின் எண்ணிக்கையை மறுசீரமைக்க வேண்டும் என்று கூறுகின்றன. நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மறுசீரமைத்தல் ஆணையம் இந்த எல்லை நிர்ணயச் செயல்முறையை மேற்கொள்ளும். Delimitation affect the southern states

இந்தச் செயல்முறை, பட்டியல் சாதிகள் அல்லது பட்டியல் பழங்குடியினருக்குத் தொகுதி ஒதுக்கப்படுமா என்பதையும் தீர்மானிக்கிறது. Delimitation affect the southern states

1951, 1961, 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு தொகுதிகள் மீண்டும் வரையறை செய்யப்பட்டன. 1976ஆம் ஆண்டில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக இந்தச் செயல்முறை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டது. 1971 மக்கள்தொகையே தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்கான அடிப்படையாகக் கருதப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

அரசியலமைப்பின்படி தொகுதிகளின் அளவை மறுசீரமைப்பதற்கும் இடங்களை அதிகரிப்பதற்குமான காலம் 2001ஆம் ஆண்டில் வந்தபோது, ​​வாஜ்பாய் அரசாங்கம் தன் கூட்டணியின் பலவீனம் காரணமாக, அடுத்த 25 ஆண்டுகளுக்கு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த முடிவை ஒத்திவைக்க முடிவுசெய்தது.

என்றாலும், பல தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதிலும், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினருக்குத் தொகுதிகளை ஒதுக்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக 2002ஆம் ஆண்டு தொகுதி எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2009ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் செயல்படுத்தப்பட்டன. இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முடிவு மேலும் 25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்பட்டது. Delimitation affect the southern states

அடுத்த மாற்றங்களுக்கு அடிப்படையாக அமையக்கூடிய 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, கோவிட்-19 தொற்றுநோய், மத்திய அரசின் தாமதங்கள் ஆகியவை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதன் விளைவாக, தொகுதி எல்லை நிர்ணயச் செயல்முறை 2026இல் தொடங்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையில் இரண்டு இடங்களில் தொகுதி மறுசீரமைப்பு நடந்துள்ளது. அரசியலமைப்பின் கீழ் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு 2022இல் ஜம்மு காஷ்மீரிலும், 2009இல் தொகுதி எல்லை நிர்ணயத்தின் வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த அசாமில் 2023இலும் இது நடந்தது.

இந்த இரு இடங்களிலும் நடந்த மறுசீரமைப்பு நடைமுறைகள், இது பெரும்பாலும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளதைக் காட்டுகின்றன. இது பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி சமூகங்களின் வாழ்வை முன்னேற்றுவதிலும் தோல்வியடைந்துள்ளது. Delimitation affect the southern states

முஸ்லிம் பிரதிநிதித்துவம் Delimitation affect the southern states

பாகுபாட்டின் மிகவும் பொதுவான வடிவங்களில் ஒன்று, தேர்தல் தொகுதிகளை வரைறுக்கும்போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு அல்லது குழுவுக்கு ஏற்றவாறு எல்லைகளை வகுப்பது. இந்த அணுகுமுறையின்படி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரிக்கும் வகையில் தேர்தல் எல்லைகள் வரையறுக்கப்படுகின்றன. இது அவர்களின் வாக்கு வலிமையை நீர்த்துப்போகச் செய்கிறது. இதன் மூலம் எந்த ஒரு தொகுதியிலும் முஸ்லிம்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் செல்வாக்கைக் கொண்டிருப்பதைத் தடுக்கலாம். இதனால் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாகிறது. Delimitation affect the southern states

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019, சட்டமன்ற இடங்களை 83இலிருந்து 90ஆக அதிகரிப்பதன் மூலம் புதிய எல்லை நிர்ணயத்தைக் கட்டாயப்படுத்தியது. ஜம்மு பிராந்தியத்தில் இடங்களின் எண்ணிக்கை 37இலிருந்து 43ஆக அதிகரித்தது. இது மாநில சட்டமன்றத்தில் இந்தப் பிராந்தியத்தின் செல்வாக்கை வலுப்படுத்தியது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பள்ளத்தாக்கில் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று மட்டுமே அதிகரித்து 47ஆக ஆனது. புதிதாக ஒதுக்கப்பட்ட ஒன்பது பட்டியல் பழங்குடியினருக்கான இடங்களில் ஆறு பள்ளத்தாக்கிலும், மூன்று ஜம்முவிலும் உள்ளன. Delimitation affect the southern states

அசாமில் 2023இல் புதிய எல்லை நிர்ணய செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டபோது, ​​சில சிக்கல்கள் தெளிவாகத் தெரிந்தன. உதாரணமாக, துப்ரி, பார்பேட்டா ஆகியவை முஸ்லிம் பெரும்பான்மை இடங்களாக இருந்தன. இரண்டிலும் 60%க்கும் அதிகமான முஸ்லிம் மக்கள்தொகை இருந்தது. இங்கு எப்போதும் முஸ்லிம் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, பார்பேட்டாவின் மூன்று முஸ்லிம் பெரும்பான்மை சட்டமன்றத் தொகுதிகள் – செங்கா, பாக்பர் மற்றும் ஜானியா – துப்ரிக்கு மாற்றப்பட்டன. இதன் மூலம் அதன் வாக்காளர் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்தது. இதன் விளைவாக, துப்ரி மக்களவைத் தொகுதியில் மட்டுமே இப்போது அதிக முஸ்லிம் மக்கள்தொகை உள்ளது. பார்பேட்டா மாற்றி அமைக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள்தொகை இந்தத் தொகுதியில் 35%ஆகக் குறைந்தது. Delimitation affect the southern states

மேற்கு வங்கத்தில், கட்வா மக்களவைத் தொகுதியில் சுமார் 40% முஸ்லிம் மக்கள்தொகை இருந்தது. 1952முதல் 2009வரை, அது எப்போதும் முஸ்லிம் எம்.பி.யையே தேர்ந்தெடுத்துவருகிறது. 2009ஆம் ஆண்டில், இந்தத் தொகுதி பர்தேமான் பூர்பா, பர்தேமான் துர்காபூர் என இரண்டு மக்களவை இடங்களாகப் பிரிக்கப்பட்டது. இரண்டிலும் தலா சுமார் 20% முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது. பர்தேமான் பூர்பா பட்டியல் சாதியினரின் பிரதிநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லை மறு சீரமைப்பு நடந்த பிறகு இந்த இரண்டு தொகுதிகளும் ஒரு முஸ்லிம் எம்.பி.யைக்கூடத் தேர்ந்தெடுக்கவில்லை.

சில இடங்களில், பட்டியல் சாதிகள் அல்லது பட்டியல் பழங்குடியினரின் உறுப்பினர்களுக்கான இடங்களைத் தொகுதி மறுவரையறை ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகுதிகளில் இந்தச் சமூகங்களின் மக்கள் குறைவாகவும் முஸ்லிம்கள் அதிகமாகவும் உள்ளனர். இதனால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைத்துள்ளது.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எதிரான பாகுபாடு

சில இடங்கள் தலித்துகள், ஆதிவாசிகளுக்குப் பயனளிக்கும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் இந்தச் சமூகங்களின் கணிசமான மக்கள் தொகையைக் கொண்ட பல இடங்கள் உள்ளன. அவை யாருக்கும் ஒதுக்கப்படாமல் எல்லாச் சமூகங்களாலும் போட்டியிடக்கூடிய பொதுத் தொகுதிகளாக மாறும். இது, பட்டியல் சாதிகளும் பட்டியல் பழங்குடியினரும் வலுவான எண்ணிக்கையைக் கொண்ட பகுதிகளில் அவர்களுடைய சமூகங்களிலிருந்தே சமூகத் தலைவர்கள் உருவாவதைத் தடுக்கும்.

தென்னிந்திய மாநிலங்கள் Delimitation affect the southern states

1971ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 1976ஆம் ஆண்டு தொகுதிகளின் அளவு முடக்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மக்கள்தொகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள மக்கள்தொகைக்குள் கணிசமான மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. பிகாரில், ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் தோராயமாக 3.1 மில்லியன் குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கேரளத்தில் இந்த விகிதம் 1.75 மில்லியனாக உள்ளது.

2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்தால், குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகளைத் திறம்படச் செயல்படுத்திய தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை குறைய நேரிடும்.

மக்களவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையான 543 ஆகவே தக்கவைக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையில் மறுபகிர்வு செய்யப்பட்டால் சில வட இந்திய, தென் மாநிலங்களுக்கு இடையிலான வேறுபாடு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அதாவது, மக்கள்தொகை அடிப்படையில் தென் மாநிலங்களுக்கான இடங்கள் குறையும். தற்போதுள்ள மொத்த இடங்களை மாற்றாமல் தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் அதன் நிலை பின்வருமாறு இருக்கும் (அடைப்புக்குறிக்குள் இருப்பவை தற்போதுள்ள இடங்கள்):

உ.பி: 91 (80), பிகார்: 50 (40), ராஜஸ்தான்: 31 (25), கர்நாடகம்: 31 (28), தமிழ்நாடு: 31 (39), ஆந்திரம், தெலங்கானா: 34 (42), கேரளம்: 12 (20).

அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் ஒரே மாதிரியாக இருக்கும் ஒரு சமயம், 2026ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் இடங்களின் எண்ணிக்கை 848ஆக அதிகரிக்கப்பட்டால், சில வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாடு பின்வருமாறு இருக்கும் (அடைப்புக்குறிக்குள் இருப்பவை தற்போதுள்ள இடங்கள்):

உ.பி: 143 (80), பிகார்: 79 (40), ராஜஸ்தான்: 50 (25), கர்நாடகம்: 41 (28), தமிழ்நாடு: 49 (39), ஆந்திரம், தெலங்கானா: 54 (42), கேரளம்: 20 (20).

இரு விதமான மறுசீரமைப்புகளிலும் வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கணிசமாக உயர்ந்திருப்பதைக் காணலாம். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் குறைவு என்பது மக்களவையில் இந்த மாநிலங்களின் அரசியல் செல்வாக்கைக் குறைக்கும். மத்திய அரசிடமிருந்து போதுமான வள ஆதாரங்களைப் பெறும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பாதிக்கும்.

என்ன செய்யலாம்?

உச்ச நீதிமன்ற அமர்வு, தொகுதி எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவுகள் தன்னிச்சையாகவோ அல்லது அரசியலமைப்புக் கொள்கைகளை மீறுவதாகவோ கருதப்பட்டால், அவற்றை மறுபரிசீலனை செய்யும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் உத்தரவை 2024 அக்டோபரில் நிறைவேற்றியது. ஒதுக்கப்பட்ட சமூகங்கள் அல்லது சில மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் கட்டுப்படுத்தும் எல்லை நிர்ணயக் கொள்கைகளுக்கு எதிராகக் கேள்வி எழுப்பக் குடிமக்களுக்கு இது ஒரு நம்பிக்கையின் சாளரத்தைத் திறந்துள்ளது.

இருப்பினும், நீதித்துறை தலையீட்டை விட, இந்த செயல்பாட்டில் சமத்துவத்தை உறுதி செய்ய அரசியல் கட்சிகளே உறுதியான அரசியல் நடவடிக்கையை எடுக்க முடியும். இந்தச் செயல்முறைக்குப் பிறகு தென் மாநிலங்கள் எவ்வாறு குறைவாக பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பதை வெறுமனே எடுத்துக்காட்டுவதற்குப் பதிலாக, எல்லை நிர்ணயம் முஸ்லிம்கள், பட்டியல் சாதிகள், பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் எதிர்க்கட்சிகள் பேச வேண்டும்.

நன்றி: ஸ்க்ரால் இணைய இதழ்

தமிழில்: தேவா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share