போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை நம்ப வைத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது நள்ளிரவில் அதிரடியாக தாக்குதலை துவக்கியது இந்திய ராணுவம். இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாக பாகிஸ்தான் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதற்கு இந்தியா என்னென்ன முன்னேற்பாடுகளை செய்துவருகிறது என்ற கேள்வி நம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. will pakistan target chennai for Operation Sindoor
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுமானால், பாகிஸ்தான் இந்தியாவின் எந்த பகுதிகளை குறிவைக்கும் ? will pakistan target chennai for Operation Sindoor
அந்த குறியில் தமிழ்நாடு உள்ளதா? குறிப்பாக ராணுவ ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலை உள்ள சென்னை குறிவைக்கப்படுமா?
பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்தால் இந்தியாவினால் பொருட்செலவை சமாளிக்க முடியுமா?
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை இந்தியா திசைதிருப்பி தாக்குதல் நடத்தியதை போன்றே பாகிஸ்தான் என்ன உத்திகளை கையாள போகிறது? இது போல பல கேள்விகள் எழுந்துள்ளது.

ராணுவ பலத்தில் இந்தியா முன்னணி! will pakistan target chennai for Operation Sindoor
முதலில் இந்தியா – பாகிஸ்தான் இடையில் போர் தொடங்கினால் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்துகொள்வோம். அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இரு நாடுகளும் ஏற்கனவே பேசி வைத்திருக்கின்றன. ஏனெனில் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் இருநாடுகளுக்கும் பேரழிவு ஏற்படக்கூடும். ஒருவேளை இருநாடுகளில் ஒருவருக்கு மிகவும் அழுத்தம் ஏற்பட்டாலும் கூட ‘கன்வென்ஷனல் அட்டாக்‘ என்ற வகையில் தான் தாக்குதல் நடத்தப்படலாம். அதாவது, போர் விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றின் மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இந்திய ராணுவத்தை வீழ்த்த வேண்டும் என்று பாகிஸ்தான் நினைத்தால் ராணுவ பலம், பொருளாதார பலம் இரண்டையும் வீழ்த்த வேண்டும் என்று பாகிஸ்தான் காய் நகர்த்த கூடும்.
ஆனாலும் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் அந்த அளவிற்கு பொருளாதார பலம் ஏதும் அவர்களிடம் இல்லை. ஆனால் ராணுவ பலம் இருக்கிறது. இருந்தாலும் பாகிஸ்தானில் இருக்கும் ராணுவ அதிகாரிகளைவிட இந்திய ராணுவ அதிகாரிகள் மிகவும் சிறப்பான முறையில் பயிற்சி பெற்றவர்கள். 1971ஆம் ஆண்டு நடந்த போரின் போது பாகிஸ்தானை சேர்ந்த 90,000 வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். will pakistan target chennai for Operation Sindoor
அதிலிருந்த ராணுவ வீரர் கூறுகையில், இந்திய ராணுவத்திற்கு இருப்பது போன்று அதிகாரிகள் இருந்திருந்தால் உலகில் யாராலும் வீழ்த்த முடியாத படையாக பாகிஸ்தான் ராணுவம் இருக்கும்’ என்ற அவரது கூற்றுப்படி படைகளின் முன்னால் உயிரை கூட பணயம் வைத்து போராடக் கூடிய அதிகாரிகள் இந்திய ராணுவத்தில் உள்ளனர். will pakistan target chennai for Operation Sindoor
கன்வென்ஷனல் அட்டாக் முறையில் 10, 15 நாட்கள் தொடர்ந்து போர் நடந்தால் இந்தியாவின் பொருளாதாரம் சற்று பின்னடைவை சந்திக்கலாம். அதேசமயம் பாகிஸ்தானில் நீண்ட போரை நடத்துவதற்கு உரிய வசதிகள் இல்லை. எனவே மிகவும் கவனமாக குறுகிய நாட்கள் நீடிக்கும் போராக தான் தொடர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த போரினால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் பல்வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்படும். எனவே இந்தியா – பாகிஸ்தான் போர் தொடங்கினால் சில நாட்கள் மற்ற நாடுகள் அமைதி காத்திருக்கும். நீண்ட நாட்கள் ஆகும் நிலை ஏற்பட்டால் பல்வேறு நாடுகளும் தலையிட்டு தீர்வு காண முயற்சிப்பர்.
ஏன் அந்த 9 இடங்கள்? will pakistan target chennai for Operation Sindoor
பாகிஸ்தானில் 5 இடங்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4 இடங்கள் என 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த 9 இடங்களுக்கும் இந்தியா மீது கடந்த காலங்களில் நடந்த பயங்கரவாத ஊடுருவல்களுக்கும் தொடர்பு இருக்கிறது. மிகத் தீவிரமாக ஆய்வு செய்தே, அங்குள்ள பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தீவிரவாதிகளைக் குறிவைக்கும் வகையில் இந்த இடங்களை இந்திய ராணுவம் தேர்வு செய்துள்ளது.

அதில் முரிட்கே: லஷ்கர்-இ-தொய்பா தளம் மற்றும் பயிற்சி அளிக்கும் இடம்
பஹவல்பூர்: ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம்
கோட்லி: வெடிகுண்டு பயிற்சி மையம்
குல்பூர்: ரஜோரி மற்றும் பூஞ்சில் தாக்குதல்களுக்கான மையம்
சவாய்: காஷ்மீர் பள்ளத்தாக்கு தாக்குதல்களுடன் தொடர்புடைய தீவிரவாத முகாம்
சர்ஜால் மற்றும் பர்னாலா: ஊடுருவலுக்குப் பயன்படும் இடங்கள்
மெஹ்மூனா: ஹிஸ்புல் முஜாஹிதீன் பதுங்கும் இடம்
இந்தியாவில் எந்த பகுதியை குறிவைக்கும்? will pakistan target chennai for Operation Sindoor
இப்படி தீவிரவாதிகளைக் குறிவைக்கும் வகையில் இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு இந்தியா தாக்குதல் நடத்தியது போல் பாகிஸ்தான் குறிவைக்க இந்தியாவில் தீவிரவாதிகளின் கூடாரம் என்ற ஒன்று இல்லை என்பதால் இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தே தீரவேண்டுமென பாகிஸ்தான் நினைத்தால் இந்தியாவில் எந்த பகுதியை குறிவைக்கும்?
நாம் ஏற்கனவே பார்த்தது போல இந்திய ராணுவத்தை வீழ்த்த வேண்டும் என்று பாகிஸ்தான் நினைத்தால் ராணுவ பலம், பொருளாதார பலம் இரண்டையும் வீழ்த்த வேண்டும். அதற்கான இடங்களாக இந்தியாவில் இருக்கும் இடங்கள்தான் பாகிஸ்தானால் குறிவைக்கப்படும் அந்த அடிப்படையில் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் ராணுவ ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலை உள்ள சென்னை ஆவடி, கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுகத்தை குறிவைக்கலாம்.

ஆனால் அது பாகிஸ்தானால் சாத்தியமா ? என்றால் அதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் சாத்தியம் குறைவாகத்தான் உள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் பாகிஸ்தான், அணு ஆயுதங்கள் மற்றும் பலவகைத் தூரநிலை ஏவுகணைகளைக் கொண்ட நாடாகும். குறிப்பாக சாஹீன்-2 மற்றும் அபபீல் போன்ற ஏவுகணைகள், 1,500 முதல் 2,200 கி.மீ. வரை உள்ள இலக்குகளை தாக்கக்கூடியவை.
பாகிஸ்தானிலிருந்து சென்னை வரை உள்ள தூரம் சுமார் 1,800 கி.மீ. என்பதால், தொழில்நுட்ப ரீதியாக சென்னையை தாக்கும் வாய்ப்பு இருப்பதாக யூகிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதற்கு மேலாக, இந்தியாவிடம் ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. ஏவுகணை தடுப்பு முறைகள், முன்னெச்சரிக்கை ரேடார் அமைப்புகள் மற்றும் பதிலடி தாக்குதலை நடத்தும் அளவிற்கு ராணுவ வலிமையும் இருக்கின்றன. ஆகையால் அதைப்பற்றிய பெரும் கவலை நமக்கு இல்லையென்ற சூழ்நிலையில்தான் இருக்கின்றோம்.
பொருளாதார ரீதியாக யார் பலசாலி? will pakistan target chennai for Operation Sindoor
அடுத்ததாக இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடந்தால் இந்தியாவால் பொருட்செலவை சமாளிக்க முடியுமா? என்ற அடுத்த கேள்விக்கு மத்திய அரசின் உயர்மட்ட வட்டாரங்களில் விசாரித்த வகையில் , ‘ஆம், இந்தியாவால் முடியும்’ என்றே உறுதியாக தெரிவிக்கின்றனர். மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பாதுகாப்புக்கான ஒதுக்கீடுகளும் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இந்தப் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக ரூ. 6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட 9.53% கூடுதல் நிதி என்பது கவனிக்கத்தக்கது.

மத்திய அரசின் உயர் வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளது என்றும், தற்போது அது 4.4% ஆக இருக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நிதிப் பற்றாக்குறை 9.2% ஆக இருந்தது என்பது கவனிக்கவேண்டியது. இந்தியாவுக்கு நிதி பிரச்சனை இல்லை என்றும், போதுமான வருவாய் உள்ளது என்றும் அரசு உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, ராணுவ நடவடிக்கையின்போது அவசரமாக உபகரணங்கள் மற்றும் பிற தேவைகளை வாங்க வேண்டியிருக்கும். இந்த நிதி செலவிற்கும் ஏற்கனவே அரசு ஒப்புதல் அளித்துள்ளது..
இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான் ஏற்கனவே தனது பாதுகாப்புச் செலவுகளில் 18% அதிகரிப்பு பற்றிப் பேசி வருகிறது. மேலும் இந்தியா எடுத்த பல நடவடிக்கைகளின் காரணமாக நிதிப் பற்றாக்குறையையும் பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) க்கு முறையாகவும், வாய்மொழியாகவும் தெரிவித்துள்ளது. வருவாய்த் துறை இதை FATF-க்கு வாய்மொழியாகத் தெரிவித்துள்ளது, மேலும் பொருளாதார விவகாரத் துறை ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் இதுபோன்ற பிற வங்கிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஒருவேளை போர் தொடர வாய்ப்பிருந்தால் அதிகப்பட்ச பாதிப்புகளை சந்திக்க பாகிஸ்தானே தயார்நிலையில் இருக்கவேண்டும் என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. will pakistan target chennai for Operation Sindoor