தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்புகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் அடங்கிய குழு இன்று (ஜனவரி 2) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள்- ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த ககன்தீப் சிங் பேடி குழுவும் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்த பின்னணியில் தமிழக அமைச்சர்கள் குழு இன்று அரசு ஊழியர்கள்- ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இப்பேச்சுவார்த்தையை நடத்துகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படுமா? அல்லது அரசு ஊழியர்கள்- ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தபடி ஜனவரி 6-ந் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடங்கப்படுமா? என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
