உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவராலும் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் முக்கியமான செயலியாக வாட்ஸப் உள்ளது.
இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இன்று (அக்டோபர் 25) மதியம் 12.30 மணியிலிருந்து வாட்ஸப் சேவை முடங்கியுள்ளது. இதனால் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸப் சேவை கிடைக்காததால் பயனாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
வாட்ஸப் முடங்கியுள்ள நிலையில் மெட்டா நிறுவனம் அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #Whatsappdown என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
பாதுகாப்பு வளையத்தில் கோவை; துணை ராணுவப்படையினர் வருகை!