“என்ன நடந்தாலும் என் கடமை தொடரும்”: தீர்ப்பு குறித்து ராகுல் காந்தி

Published On:

| By Kavi

my duty will continue Rahul Gandhi

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்.பி.பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 4) நிறுத்தி வைத்தது. இதனால் அவர் மீண்டும் எம்.பி.யாக தொடரவுள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன நடந்தாலும் எனது கடமை தொடரும். இந்தியாவின் தத்துவத்தைப் பாதுகாப்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.

அதுபோன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “உண்மை எப்போதும் வெல்லும். மக்களின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. எனது இலக்கு என்னவென்று எனக்குத் தெரியும். நான் என்ன செய்ய வேண்டும் என்றும் எனக்குத் தெரியும்” என்று கூறினார்.

மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “நீதியை நிலைநாட்ட முடியும் என்பதற்கு இன்றைய தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு. முன்னதாக தண்டனை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இப்போது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. எத்தனை மணி நேரத்தில் அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார் என்று பார்ப்போம்” என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில் சென்னை சத்யமூர்த்திபவன் உட்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரியா

மீண்டும் எம்.பி.ஆகும் ராகுல் : உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முழு விவரம்!

தப்பிப் பிழைத்தது ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி.பதவி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share