நாகாலாந்து தீவிரவாதிகளால் 37 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனரா? உண்மை என்ன? மத்திய அரசு விளக்கம்

Published On:

| By Minnambalam Desk

இந்திய வீரர்கள் நாகா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்’’ என்ற தலைப்பில் மே 9ந் தேதி வெளியான கட்டுரை முற்றிலும் தவறானது, அடிப்படையற்றது, தீய நோக்கத்துடன் பதிவிடப்பட்டது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் சில ஊடகங்களில், வடகிழக்கு மாநிலத்தில் நாகாலாந்து தீவிரவாதிகளால் 37 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த பொய்ச் செய்தி தீய நோக்கத்துடன் பதிவிடப்பட்ட முற்றிலும் தவறானது என்கிறது மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை சரிபார்ப்பகம்.

நாகாலாந்தில், நாகாலிம் என்ற பெயரில் அகன்ற தனி நாகாலாந்து நாடு கோரி ஆயுதக் குழுவினர் தற்போதும் சிறிய அளவில் இயங்கி வருகின்றனர். இவர்கள்தான் இந்திய ராணுவத்தினரை கொன்றதாக பொய்யான தகவல்கள் பரப்பிவிடப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share