தமிழகத்தில் இன்று (டிசம்பர் 5) காலை 10 மணி வரை 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- ராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- மயிலாடுதுறை
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- புதுக்கோட்டை
ஆகிய 14 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
