வங்க கடலில் டிட்வா (Ditwah) புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வரும் நிலையில் சென்னையில் மழை பெய்து வருகிறது.
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வந்த டிட்வா புயல், கடலிலேயே வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வருகிறது ‘டிட்வா’.
இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. டிட்வா, காற்றழுத்த தாழ்வு நிலையாக மேலும் வலுவடையும் வரை சென்னைக்கான மழையும் தொடர வாப்புள்ளது. சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
